



உனது புன்னகை....
பால் நிலாவை
பைத்தியம் பிடிக்க வைக்கும்.
உனது பேச்சு....கிளிகளுக்கும்
கிளுகிளுப்புக் கொடுக்கும்.
உனது நடை...அன்னப் பறவைக்குப்
பாடம் நடத்தும்...
உனது பாட்டைக் கேட்டால்..குயில்கள்
சங்கீதக் கலையின்
இலக்கணம் அறியும்.
- யாழ் சுதாகர்
யாழ் சுதாகரின் குரல் பதிவுகள் [NEW]
No comments:
Post a Comment